Monday, October 5, 2009

சுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்

>
> சுவர்க்க
> வாசிகள்
> vs
>
> நரக
> வாசிகள்
>
>
> இன்னும்
> அவர்கள்
> தெரிந்தெடுக்கும் கனி
> வகைகளையும்
> விரும்பும்
> பட்சிகளின்
> மாமிசத்தையும் (கொண்டு
> அவ்விளைஞர்கள்
> வருவார்கள்) (56:20,21)
>
> உணவு
>
> அவர்களுக்கு
> விஷச் செடிகளைத் தவிர,
> வேறு உணவில்லை. அது
> அவர்களைக் கொழு(த்துச்
> செழி)க்கவும் வைக்காது
> அன்றியும் பசியையும்
> தணிக்காது. (88:6,7)
>
>
>
> நிச்சயமாக
> நல்லவர்கள்
> (சுவர்க்கத்தில்)
> குவளைகளிலிருந்து
> (பானம்) அருந்துவார்கள்
> அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்
> (76:5)
>
> பானம்
>
> அவனுக்கு
> முன்னால் நரகம் தான்
> இருக்கிறது, இன்னும்
> அவனுக்கு (துர்
> நாற்றமுள்ள) சீழ் நீரே
> குடிக்கக்
> கொடுக்கப்படும். அதை அவன்
> (சிரமத்தோடு) சிறிது
> சிறிதாக
> விழுங்குவான். எனினும் அது
> அவன் தொண்டையில்
> எளிதில் இறங்காது
> ஒவ்வொரு
> திசையிலிருந்தும்
> அவனுக்கு மரணம் வந்து
> கொண்டிருக்கும். எனினும் அவன்
> இறந்து விடுபவனும்
> அல்லன்.
> அன்றியும் அவன் முன்னே
> (மிகக்) கொடிய
> வேதனையும் உண்டு.
> (14:16,17)
>
>
>
> அவர்களின்
> மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக்
> போன்ற பச்சை நிற
> பூம்பட்டாடைகள்
> இருக்கும்.
> இன்னும் அவர்கள்
> வெள்ளியாலாகிய
> கடகங்கள்
> அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும்,
> அவர்களுடைய இறைவன்
> அவர்களுக்குப்
> பரிசுத்தமான பானமும்
> புகட்டுவான். (76:21)
>
> ஆடை
>
> (முஃமின்களும்,
> முஃமின்களல்லாதவருமான)
> இரு தரப்பாரும் தம்
> இறைவனைப் பற்றித்
> தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர்
> (இறைவனை)
> நிராகரிக்கிறார்களோ
> அவர்களுக்கு
> நெருப்பிலிருந்து
> ஆடைகள்
> தாயாரிக்கப்படும். கொதிக்கும்
> நீர் அவர்கள் தலைகளின்
> மேல் ஊற்றப்படும்.
> (22:19)
>
>
>
> அந்நாளில்
> சிலமுகங்கள் இலங்கிக்
> கொண்டிருக்கும்.
> சிரித்தவையாகவும்,
> மகிழ்வுடையதாகவும்
> இருக்கும். (80:38,39)
>
> தோற்றம்
>
> ஆனால்
> அந்நாளில் - (வேறு) சில
> முகங்கள், அவற்றின்
> மீது புழுதி
> படிந்திருக்கும்.
> (80:40)
>
>
> (பொன்னிழைகளால்)
> செய்யப்பட்ட
> கட்டில்களின் மீது - ஒருவரையொருவர்
> முன்னோக்கியவர்களாக,
> அவற்றின் மீது
> சாய்ந்திருப்பார்கள்.
> (56:15,16)
>
> படுக்கை
>
> அவர்களுக்கு
> நரகத்தில் (நெருப்பு)
> விரிப்புகளும்,
> (போர்த்திக்
> கொள்வதற்கு)
> அவர்களுக்கு மேலே
> நெருப்புப்
> போர்வைகளும் உண்டு -
> இன்னும் இவ்வாறே
> அநியாயம்
> செய்பவர்களுக்கு நாம்
> கூலி கொடுப்போம்.
> (7:41)
>
>
>
> எவர்
> தம் இறைவனுக்கு
> பயபக்தியுடன் நடந்து
> கொண்டார்களோ அவர்கள்
> கூட்டங்கூட்டமாக
> சுவர்க்கத்தின்பால்
> கொண்டு
> வரப்படுவார்கள். அங்கு அவர்கள்
> வந்ததும், அதன்
> வாசல்கள்
> திறக்கப்படும். அதன்
> காவலர்கள் அவர்களை
> நோக்கி "உங்கள் மீது
> சாந்தி உண்டாகட்டும்,
> நீங்கள் மணம்
> பெற்றவர்கள் எனவே
> அதில் பிரவேசியுங்கள்
> என்றென்றும் அதில்
> தங்கிவிடுங்கள்"
> (என்று அவர்களிடம்
> கூறப்படும்). (39:73)
>
> வரவேற்பு
>
> "நரகத்தின்
> வாயில்களுள் நுழைந்து
> விடுங்கள்
> என்றென்றும் அதில்
> தங்கிவிடுங்கள்"
> என்று (அவர்களுக்குக்)
> கூறப்படும் பெருமை
> அடித்துக்
> கொண்டிருந்தோருடைய
> தங்குமிடம் மிகவும்
> கெட்டது. (39:72)
>
>
>
> அவன்
> உங்களுக்கு உங்கள்
> பாவங்களை மன்னிப்பான்
> சுவனபதிகளில் உங்களை
> பிரவேசிக்கச்
> செய்வான் அவற்றின்
> கீழே ஆறுகள்
> ஓடிக்கொண்டிருக்கும்
> அன்றியும், நிலையான
> அத்னு என்னும் நிலையான
> சுவர்க்கச்
> சோலைகளின் மணம்
> பொருந்திய
> இருப்பிடங்களும்
> (உங்களுக்கு) உண்டு
> இதுவே மகத்தான
> பாக்கியமாகும். (61:12)
>
> தங்குமிடம்
>
> அது
> சுட்டெரிக்கும்
> நெருப்பாகும்
> (101:11)
> அவர்கள்
> நரகில் கருகுவார்கள்
> (83:16)
>
>
> அவர்கள்
> செய்த
> (நற்)கருமங்களுக்குக்
> கூலியாக மறைத்து
> வைக்கப்பட்டுள்ள கண்
> குளிர்ச்சியை
> (மறுமையின்
> பேரின்பத்தை) எந்த ஓர்
> ஆன்மாவும் அறிந்து
> கொள்ள முடியாது. (32:17)
>
> முன்னேற்பாடு
>
> மேலும்,
> எவர்கள் மறுமை நாள்
> மீது நம்பிக்கை
> கொள்ளவில்லையோ,
> அவர்களுக்கு
> நிச்சயமாக நாம், நோவினை
> தரும் வேதனையைச்
> சித்தப்படுத்தி
> இருக்கின்றோம். (17:10)
>
>
>
> அதில்
> அவர்கள் என்றென்றும்
> தங்கியிருப்பார்கள். அவர்கள்
> அதிலிருந்து மாறி
> (வேறிடம்) செல்ல
> விரும்ப மாட்டார்கள்.
> (18:108)
>
> நிரந்தரம்
>
> நிச்சயமாக
> வேதக்காரர்களிலும்
> முஷ்ரிக்குகளிலும்
> எவர்கள்
> நிராகரிக்கிறார்களோ
> அவர்கள் நரக
> நெருப்பில்
> இருப்பார்கள் - அதில்
> என்றென்றும்
> இருப்பார்கள் -
> இத்தகையவர்கள்தாம்
> படைப்புகளில் மிகக்
> கெட்டவர்கள் ஆவார்கள்.
> (98:6)
>

No comments:

Post a Comment